இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 404 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 258 ரன்களும் எடுத்து டிக்ளெர் செய்தது. இதனால் 513 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.

Advertisement

இந்த போட்டியில் சரிவில் இருந்த இந்திய அணியை சட்டேஷ்வர் புஜாரா 90 மற்றும் 102 ரன்களை அடித்து காப்பாற்றினார். ஆனால் புஜாராவை போலவே சுப்மன் கில்லும் 2ஆவது இன்னிங்ஸில் சதமடித்து கடினமான இலக்கை நிர்ணயிக்க உதவியிருந்தார். 130 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 110 ரன்களை குவித்தார்.

Advertisement

இந்நிலையில் இவர் தான் இந்தியாவின் அடுத்த விராட் கோலி என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சுப்மன் கில் தனக்கு கிடைத்த சில தவறவிட்டார். ஆனால் தற்போது கம்பேக் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு கிளாசி ப்ளேயர் ஆகும். எனவே விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியில் ஜொலிக்கப்போவது சுப்மன் கில் தான் ஆகும். அவர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் அசால்ட்டாக விளையாடக்கூடிய விரர்.

வங்கதேசத்துடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா கம்பேக் கொடுப்பார் என தெரிகிறது. ஒருவேளை ரோஹித் ஓப்பனிங்கிற்கு வந்தாலும், சதமடித்த சுப்மன் கில்லை ஒதுக்க முடியாது. எனவே இருவரையும் ஒரே அணியில் கொண்டு வர வேண்டும் என்றால் ஒரு ஸ்பின்னரை குறைத்து விடுவார்கள். எனவே முதல் டெஸ்டில் விளையாடும் 3 ஸ்பின்னர்களில் ஒருவரை நீக்கிவிடுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் சட்டேஷ்வர் புஜாராவும் சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளார். ஏற்கனவே ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், சுப்மன் கில், புஜாரா, ஸ்ரேயாஸ், பந்த், ஹர்திக் பாண்டியா என பலரும் தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என வந்து நின்றுள்ளதால் பிளேயிங் லெவனில் பெரிய குழப்பங்கள் ஏற்படும் எனத்தெரிகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News