ஐசிசி விருதுகள் 2022: வளர்ந்துவரும் வீரர் விருது பட்டியலில் அர்ஷ்தீப் சிங்!

Updated: Wed, Dec 28 2022 19:33 IST
Arshdeep Singh Nominated For ICC Men's Emerging Cricketer Of The Year Award For 2022 (Image Source: Google)

ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் வெளியாக தொடங்கி உள்ளன. வரும் 30ஆம் தேதி வரையில் இந்த பரிந்துரை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், வளர்ந்து வரும் வீரர் மற்றும் வீராங்கனை என மொத்தம் 13 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங், தென் ஆப்ரிக்காவின் மார்கோ ஜான்சென், நியூஸிலாந்து அணியின் ஃபின் ஆலன், ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஸாத்ரன் ஆகியோர் ஐசிசி வளர்ந்துவரும் வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான அர்ஷ்தீப் சிங், உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருபவர். ஐபிஎல் அரங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஜூலை வாக்கில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 21 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ள அவர் 33 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். 

அதேசமயம் ஐச்சிசி வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் மற்றும் யாஸ்திகா பாட்டியா இடம் பிடித்துள்ளனர். அவர்களுடன் ஆஸ்திரேலியாவின் டார்சி பிரௌன், இங்கிலாந்தின் அலிஸ் கேப்ஸி ஆகியோரும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை