பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, சர்ஃப்ராஸ் அகமது உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதேசமயம் அவர்களுக்கு மாற்றாக காம்ரன் குலாம், சஜித் கான், நோமன் அலி ஆகியோருக்கு இப்போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

Advertisement

மூவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி அணியின் வெற்றியிலும் பங்காற்றினர். இதில் காம்ரன் குலாம் சதமடித்தும், நோமன் அலி 20 விக்கெட்டுகளையும், சஜித் கான் 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதேசமயம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனோ பாபர் ஆசாம் தொடர்ச்சியாக சொதப்பியதன் கரணமாகவே அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற தகவல்களும் வெளியாகி வந்தன.

இந்நிலையில் பாபர் ஆசாமிற்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியா அவர், “டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் நன்றாக விளையாடுகிறார், மேலும் இரண்டு வடிவங்களிலும் அவரது பேட்டிங் சராசரியானது 50-க்கு மேல் உள்ளது. அதனால் பாபர் ஆசாமிடம் திறமை இருக்கிறது. 

இப்போது அவர் தான் விவ் ரிச்சர்ட்ஸ் என்பதை தன் குணத்தால் உலகுக்கு நிரூபிக்க வேண்டும். ஏனெனில் விவ் ரிச்சர்ட்ஸ் பெரிய போட்டிகளில் பெரிய இன்னிங்ஸை விளையாடி ரசிர்களை கவர்ந்தார். அதுபோல தற்போது பாபர் ஆசாமும்  பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் தற்போது பெரிய தொடர்கள் வரவிருப்பதால் பாபர் ஆசாமிற்கு ஓய்வு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அதேசமயம் ஜிம்பாப்வே தொடரில் அவருக்கு மீண்டும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News