வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி அங்கு முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவது போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் 225/4 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை சுல்தானா 52 ரன்களும் பர்கனா ஹோய்க் சதமடித்து 7 பவுண்டரியுடன் 107 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ரனா 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

Advertisement

அதை தொடர்ந்து 226 ரன்களை விரட்டிய இந்தியாவுக்கு ஷஃபாலி வர்மா 4 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த யாஸ்திகா பாட்டியா 5 (7) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு மறுபுறம் நிதானமாக ரன்களை குவித்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனாவும் அடுத்து வந்த ஹர்லின் தியோல் ஜோடி சேர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக 6ஆவது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 29வது ஓவர் வரை நிலைத்து நின்று 3வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் மீண்டெழுந்த இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது மந்தனா 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் அந்தப் பந்து தம்முடைய பேட் பட்டதால் அவுட்டில்லை என்று உறுதியாக இருந்த அவர் நடுவர் அவுட் கொடுத்ததால் ஸ்டம்ப் மீது அடித்து கோபத்தை வெளிப்படுத்தி திட்டிக்கொண்டே சென்றார்.

அப்போது அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் நங்கூரமாக பேட்டிங் செய்த நிலையில் எதிர்புறம் அரை சதம் கடந்த ஹர்லின் தியோல் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி சென்றது போட்டியில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. ஏனெனில் அதே ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சித்த ஜெமிமா ரோட்ரிக்ஸால் அடுத்ததாக வந்த தீப்தி சர்மா 1 ரன்னில் ரன் அவுட்டாகி சென்றார்.

அதை விட அடுத்ததாக வந்த அமன்ஜோத் கௌர் 10 ரன்னில் அவுட்டாக ஸ்நே ரனா, தேவிகா வைத்யா ஆகியோர் ஓவர்களில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் கடைசியாக வந்த மேகனா சிங் 49ஆவது ஓவரில் பவுண்டரி அடித்ததால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரின் 3ஆவது பந்தில் மேக்னா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததால் ஒரு கட்டத்தில் 191/4 என்ற நல்ல நிலைமையில் இருந்த இந்தியா 225 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெற்றியையும் கோட்டை விட்டது.

Advertisement

சரி அப்போது சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போட்டியின் தொடக்கத்தில் மழை வந்து தாமதம் ஏற்பட்டதால் போட்டி நேரம் முடிந்த காரணத்தால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது. ஏனெனில் சூப்பர் ஓவர் நடத்துவதற்கு வெறும் 10 – 20 நிமிடங்கள் போதுமானது என்ற நிலையில் நடுவரின் இந்த முடிவு இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

 

இந்நிலையில் செய்தியாளர்களிடன் பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், “இந்தப் போட்டியில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம் . மேலும் வங்கதேசத்திற்கு கிரிக்கெட் விளையாட வரும் போது கிரிக்கெட் விளையாடுவதுடன் சேர்த்து இது போன்ற மோசமான நடுவர்களின் சவால்களையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. அடுத்த முறை இங்கு விளையாட வரும்போது அதற்கும் தயாராகி வரவேண்டும்” என தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News