வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் தயாராகி வரும் உலகின் அனைத்து முன்னணி அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. 

Advertisement

அவருக்கு உறுதுணையாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில் அவர்களது கூட்டணியில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் சக்கை போடு போட்டு வென்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியுள்ளது. அதனால் இம்முறை உலகக் கோப்பை நமதே என்று மகிழ்ச்சியடைந்த ரசிகர்களுக்கு மினி உலகக் கோப்பையை போல் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் மண்ணை கவ்விய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகளிடம் தோற்று வெளியேறியது கவலையாக மாறியுள்ளது. 

Advertisement

அத்துடன் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பினாலும் கேப்டன் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புவனேஸ்வர் குமார், ரிஷப் பண்ட் போன்ற உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள முக்கிய வீரர்களின் தற்போதைய பார்ம் கவலைக்குரியதாக உள்ளது. அத்துடன் காயத்தால் விலகிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் உலகக் கோப்பை அணிக்கு திரும்பியது பலமாக பார்க்கப்பட்டாலும் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இந்தியாவுக்கு ஆசிய கோப்பையில் டாஸ் அதிர்ஷ்டம் போன்ற அம்சங்கள் கைகொடுக்காதது தோல்வியை பரிசளித்தது. எனவே இப்போதும் சாம்பியனாக திகழும் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்சியை இந்திய அணியின் ஜெர்ஸி பார்ட்னரான எம்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பொதுவாகவே இந்திய ரசிகர்கள் திறமை என்பதை தாண்டி ஜெர்ஸி ராசியையும் அதனுடைய வடிவத்தையும் நிறத்தையும் வெற்றியுடன் சம்பந்தப்படுத்தி பார்ப்பவர்கள். அந்த வகையில் 2003, 2011 ஆகிய ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட உலக கோப்பை ஜெர்சிகளை ரசிகர்களால் மறக்க முடியாது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஜெர்சியில் வெளிர்மையான வானத்தின் ஊதா நிறம் மத்திய பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்குள் லேசான அடர் ஊதா நிறத்தில் சில வித்தியாசமான லேட்டஸ்ட் டிசைன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தோள்பட்டை, கைகள், பக்கவாட்டு பகுதிகளில் வழக்கம்போல அடர்ந்த ஊதா நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜெர்சியின் இடதுகை பக்கவாட்டு பகுதியில் பிசிசிஐயின் லோகோவின் விளிம்பில் இருக்கும் சில கதிர்கள் அடர் ஊதா நிறத்தில் சேர்க்கப்பட்டுள்ளது வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தற்போதுள்ள அடர் ஊதா வண்ண ஜெர்ஸியை விட இது பார்ப்பதற்கு கவரும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Advertisement

கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஸ்டைலாக அணிந்து போஸ் கொடுத்துள்ள இந்த ஜெர்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. மேலும் வித்தியாசமான டிசைனில் வெளிர் ஊதா நிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜெர்சியை பார்க்கும் நிறைய ரசிகர்கள் சிறப்பாக உள்ளது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகிறார்கள்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News