சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் இருவரும் டி20 உலகக்கோப்பை அணியில் இருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு & பிரையன் லாரா!

Updated: Mon, Apr 08 2024 20:23 IST
சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் இருவரும் டி20 உலகக்கோப்பை அணியில் இருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு & பிர (Image Source: Google)

வரும் ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் மே ஒன்றாம் தேதி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீவரத்தை ஐசிசியிடம் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் சமர்பிக்க வேண்டும். அதேசமயம் அணியில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பும் அணிகளுக்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி தேர்வாளர்கள் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இதில் அவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் உடற்தகுதி போன்றவற்றை தேர்வாளர்கள் கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்யவுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளனர். 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட வேண்டும் என இன்று நடைபெற்ற தனியார் விளையாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பேசிய அம்பத்தி ராயுடு, “சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் இருவரும் கண்டிப்பாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இருவரும் டி20 உலகக் கோப்பைக்கு செல்ல வேண்டும், ஏனென்றால் அவர்கள் மிடில் ஆர்டரில் விளையாடலாம். குறிப்பாக சஞ்சு சாம்சனால் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரில் களமிறங்கக்கூடிய திறன் பெற்றார். அவர்கள் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

ராயுடுவை தொடர்ந்து பேசிய பிரையன் லாரா, “இரண்டு வீரர்களும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் இருவரும் பேட்டிங்கில் இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான வீரர் மற்றும் பந்தை சரியான நேரத்தில் அடிக்க கூடிய நபர். ரிஷப் பந்த் பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். என்னைப் பொறுத்தவரை அந்த 2 பேரும் கண்டிப்பாக அணியில் இடம்பிடிக்க வேண்டிய வீரர்கள்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை