கிரிக்கெட்டில் பல சாதனைகள் அடுத்தடுத்து முறியடிக்கப்பட்டாலும், சில லெஜண்ட்களின் சாதனையை இன்னமும் யாராலும் நெருங்க கூட முடியவில்லை. அதில் சச்சினின் 100 சதங்கள் சாதனை, முத்தையா முரளிதரனின் 800 விக்கெட்கள் சாதனையை இன்னமும் யாராலும் நெருங்க கூட முடியவில்லை. இடத்ல் 1994ஆம் ஆண்டில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்‌ஷையர் அணிக்காக விளையாடிய பிரையன் லாரா, துர்கம் அணிக்கு எதிராக 501 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார். 

Advertisement

இந்த சாதனையை இன்றுவரை யாரும் தகர்க்கவில்லை. அதேபோல், 2004ஆம் ஆண்டில், இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்களை குவித்து வரலாறு படைத்தார். இந்த இரண்டு சாதனைகளையும், இன்றுவரை யாரும் தகர்க்கவில்லை. இன்னமும், அருகில்கூட யாரும் செல்லவில்லை. தற்போதைய காலகட்டத்தில், டெஸ்டில் 300 ரன்களை அடித்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுவதால், லாராவின் இந்த சாதனையை தகர்ப்பது மிகமிக கடினம் எனக் கருதப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் தன்னுடைய இந்த அரிய இரண்டு சாதனைகளை யாரால் முறியடிக்க முடியும் என்று பிரையன் லாரா பரபரப்பான தன்னுடைய கருத்தை வெளியிட்டு பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “ஷுப்மன் கில் என்னுடைய இரண்டு சாதனைகளையும் முறியடிப்பார். இந்த புதிய தலைமுறை பேட்ஸ்மேன்களில் அவர் மிகவும் திறமையானவர். வரும் ஆண்டுகளில் அவர் கிரிக்கெட்டை ஆள்வார். நிறைய சாதனைகளை முறியடிப்பார் என்று நம்புகிறேன்.

கில் உலககோப்பையில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆனால் அவர் ஏற்கனவே விளையாடி இருக்கும் விதத்தை பாருங்கள். அவர் அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் சதங்கள் அடித்திருக்கிறார். பல மேட்ச் வின்னிங் நாக் விளையாடி இருக்கிறார். எதிர்காலத்தில் அவர் பல ஐசிசி போட்டிகளில் விளையாடுவார் என்று நம்புகிறேன்.

அவர் பேட் செய்யும் விதம் அருமையாக இருக்கிறது. அவர் மீது எனக்கு நிறைய நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. அவர் வேகப்பந்துவீச்சாளர்களை தரையோடு அடிக்க டிராக்கில் எப்படி சார்ஜ் செய்கிறார் என்று பார்த்தீர்களா?அது நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. கில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினால் என்னுடைய 501 ரன் சாதனையையும் முறியடிக்க முடியும். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய 400 ரன்களை அவர் தாண்டுவார். கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது. உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் லீகுகளில் பேட்ஸ்மேன்கள் விளையாடி நிறைய பேட்டிங் மாற்றங்கள் வந்திருக்கிறது. ஸ்கோரிங் விகிதம் உயர்ந்து விட்டது. ஷுப்மன் கில் நிறைய சாதனைகளை முறியடிப்பார். என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News