உலக சாதனை படைக்க வாய்ப்பிருந்தும் டிக்ளர் செய்தது குறித்து மனம் திறந்த வியான் முல்டர்!

Updated: Tue, Jul 08 2025 11:31 IST
Image Source: Google

Wiaan Mulder Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் முற்சதம் அடித்ததுடன் 367 ரன்களைக் குவித்துள்ளார். 

ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் முற்சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இப்போட்டியில் அவர் பிரையன் லாராவின் 400 ரன்கள் என்ற சாதனையையும் முறியடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 367 ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தார். 

இதனால் அவர் வெறும் 33 ரன்களில் பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இது ரசிகர்களை அதிருப்தியடைய செய்ததுடன், தென் ஆப்பிரிக்க அணி மீது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், பிரையன் லாரா ஒரு ஜாம்பவான் என்றும், அந்த சாதனையை தக்கவைக்க அவர் தகுதியானவர் என்பதாலும் தான் இந்த இன்னிங்ஸை டிக்ளர் செய்ததாக வியான் முல்டர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய முல்டர், “இப்போட்டியில் எங்களுக்கு தேவையான ரன்களை நாங்கள் எடுத்திருந்ததன் காரணமாக, பந்துவீச முடிவுசெய்தோம். அதேசமயம் லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பும் எனக்கு இருந்தது. ஆனால் பிரையன் லாரா ஒரு ஜாம்பவான். அந்த அந்தஸ்துள்ள ஒருவர் தான் இந்த சாதனையை தக்கவைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று எண்ணினேன். அதன் காரணமாக டிக்ளர் செய்யும் முடிவையும் எடுத்தோம்.

எனக்கு மீண்டும் இந்த வாய்ப்பு கிடைத்தாலும் கூட, நான் இதயே தான் செய்வேன். மேலும் இதுகுறித்து நான் எங்களின் பயிற்சியாளர்களிடமும் பேசினேன். அவரும் அவ்வாறே உணர்ந்தார். பிரையன் லாரா ஒரு ஜாம்பவான், அவர் அந்த சாதனையை தக்கவைக்க தகுதியானவர்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 400 ரன்களைச் சேர்த்ததே இதுநாள் வரை சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

இப்போட்டி குறித்து பேசினால் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 626 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்த நிலையில், முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி 170 ரன்களில் ஆல் ஆவுட்டானதுடன் ஃபலோ ஆனும் ஆனது. பின்னர் 456 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள நிலையில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களைச் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை