ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய களமிறக்க வேண்டும் - கிளார்க் அறிவுரை!

Updated: Thu, Oct 24 2024 10:45 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் தாமாக முன்வந்து களமிறங்கினார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தனது வழக்கமான இடத்தை விட்டு தொடக்க வீரராக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

இதனால் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்விகள் எழத்தொடங்கின. மேற்கொண்டு மிடில் ஆர்டர் வீரர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதான் காரணமாக நான்காம் வரிசையில் மீண்டூம் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கவுள்ளார் என்று அணியின் தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி அறிவித்திருந்தார்.

மேலும் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தனது வழக்கமான பேட்டிங் ஆர்டரில் களமிறங்கவுள்ளதாக ஸ்டீவ் ஸ்மித்தும் சமீபத்தில் அறிவித்தார். இதனால் புதிய தொடக்க வீரரை தேடும் முயற்சியில் ஆஸ்திரேலிய அணி இறங்கியுள்ளயுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கிளார்க், “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க வீரராக களமிறக்கி நாம் தவறு செய்தோம், எனவே அதே தவறை இந்திய அணிக்கு எதிரான தொடரில் செய்ய வேண்டாம். அதனால் ஆஸ்திரேலிய அணி ஒரு ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரைத் இத்தொடருக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள தேர்வாளர்கள் ஜோஷ் இங்கிலிஸை தொடக்க வீரர் இடத்தில் களமிறக்கலாம் என்று ஆலோசித்து வருகின்றனர்.

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் இந்த இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய ஜோஷ் இங்கிலிஸ் ஒரு ஸ்பெஷலிஸ்ட் ஓப்பனரை விட சிறந்த நபர் என்பதை நீங்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்?. அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அங்கு மிடில் ஆர்டரில் மட்டுமே அவர் பேட்டிங் செய்துள்ளார். அதனால் இங்கு யார் ரன்களை சேர்க்கிறார்கள் என்பது விஷயமல்ல, மறாக அணி தேர்வு எப்படி இருக்கும் என்பதே இங்குள்ள கேள்வி” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை