உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிசுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. தொடரில் இன்று நடைபெற்று வரும் ஒரு ஆட்டத்தில் இலங்கை மற்றும் யுஏஇ அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில்  டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணாரத்னேவும், பதும் நிசாங்காவும் களம் இறங்கினர்.

Advertisement

இருவரும் இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்த நிலையில் திமுத் கருணாரத்னே 52 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து குசல் மெண்டிஸ் களம் இறங்கினார். அவரும் தனது பங்குக்கு அரைசதம் அடித்தார். இதற்கிடையில் நிசாங்கா 57 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

Advertisement

அடுத்து களமிறங்கிய சதீரா சமரவிகரமாவும் அரைசதம் அடித்தார். இந்நிலையில் குசல் மெண்டிஸ் 78 ரன், சமரவிக்ரமா 73 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 48 ரன், தசுன் ஷனகா 1 ரன், டி சில்வா 5 ரன், இறுதியில் அதிரடி காட்டிய ஹசரங்கா 12 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் முதல் 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். இதையடுத்து 356 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யுஏஇ அணிக்கு கேப்டன் முகமது வசீம் - ரோஹன் முஸ்தஃபா இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் முஸ்தஃபா 12 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் முகமது வசீம் 39 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய அரவிந்த் 39 ரன்களிலும் அன ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டனர். பின்னர் வந்த பசில் ஹமீத், அசிஃப் கான், ரமீஸ் ஷஷாத் ஆகியோரும் அடுத்தடுத்து ஹசரங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். 

அதன்பின் வந்த அலி நேசர் ஓரளவு தாக்குப்பிடிக்க மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் யுஏஇ அணி 39 ஓவர்களில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய வநிந்து ஹசரங்கா 24 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

இதன்மூலம் இலங்கை அணி 175 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி ஓமன் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News