தீபக் ஹூடாவின் மன உறுதி இப்போட்டியில் தெரிந்தது - சூர்யகுமார் யாதவ்

Updated: Mon, Feb 07 2022 12:38 IST
Deepak Hooda's confidence was spot on in first ODI, says Suryakumar Yadav (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக தீபக் ஹூட அறிமுக வீரராக களமிறங்கினார்.

இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில்  6ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தீபக் ஹூடா 26 ரன்களைச் சேர்த்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் தீபக் ஹூடாவின் மன உறுதி எப்படி உள்ளதென்பது தெரிந்ததாக சக வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டியில் நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே சிறப்பாக செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். நான் அவரிடம் (ஹூடாவிடம்) எதுவும் சொல்லவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். கடைசி வரை அவர் களத்தில் இருப்பது அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். மேலும் நம்பிக்கையும், மன உறுதியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை