ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Wed, Mar 13 2024 16:32 IST
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்! (Image Source: Google)

இங்கிலாந்து அணியானது, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. முன்னதாக இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டிருந்த நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களினால் இத்தொடரிலிருந்து விலகினார். 

இதையடுத்து அவர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஹாரி ப்ரூக் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் ஹாரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. 

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஹாரி ப்ரூக், 11 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 190  ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவர் வீரர்கள் ஏலத்திற்கு முன்னரே ஹைதராபாத் அணி கழட்டிவிட்டது. இந்நிலையில் தான் வீரர்கள் மினி ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

இதன் காரணமாக அவர் டேவிட் வார்னருடன் இணைந்து தொடக்க வீரராகவோ அல்லது நான்காம் இடத்திலோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தொடரிலிருந்தே ஹாரி ப்ரூக் விலகியுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவருக்கு சரியான மாற்று வீரரை தேர்வு செய்யும் முயற்சியில் தற்போது அந்த அணி இறங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை