கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சர்வதேச இந்திய அணிக்கு அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

Advertisement

தோனி இந்திய அணியின் ரெகுலர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இருந்ததால் தினேஷ் கார்த்திக்கால் ரெகுலராக இந்திய அணியில் விளையாட முடியவில்லை. எப்பொழுதெல்லாம் தோனி ஓய்வெடுத்துக் கொள்கிறாரோ அப்பொழுதெல்லாம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக வளம் வந்த தினேஷ் கார்த்திக், தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி வந்தார்.

Advertisement

தோனியின் ஓய்விற்குப்பின் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் முக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இவரால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாட முடியவில்லை. மேலும் வயதான தினேஷ் கார்த்திக்க்கை தேர்ந்தெடுப்பதற்கு பதில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேர்ந்தெடுத்தால் எதிர்கால இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்பதால் தினேஷ் கார்த்திக் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

ஆனால் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடர் இந்திய அணியின் தேர்வாளர்கள் உட்பட அனைவரது எண்ணத்தையும் மாற்றி விட்டது என்றே கூறலாம், ஏனென்றால் இந்த தொடரில் தினேஷ் கார்த்திக் மிக அதிரடியாக செயல்பட்டு ஒற்றையாளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

விளையாடுவதற்கு வயது ஒன்றும் தடை கிடையாது என்பதை நிரூபிக்கும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இப்படிப்பட்ட வீரரை இதற்கு மேல் புறம் தள்ள முடியாது என்ற நிலையில் இந்திய அணி தேர்வாளர்கள் தினேஷ் கார்த்திகை மீண்டும் இந்திய அணியில் இணைத்துக் கொண்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை தினேஷ் கார்த்திக் தன்னுடைய கடமையை சிறப்பாக செய்து வருகிறார்.பல போட்டிகளில் போராடி நல்ல பினிஷிங்கை இந்திய அணிக்கு கொடுத்து உலகக் கோப்பை தொடருக்ககான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

Advertisement

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதற்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக் தற்போது இந்திய அணியில் விளையாடுவதற்கு முக்கிய காரணம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன்மீது வைத்த நம்பிக்கைதான் என்று ரீடுவீட் செய்துள்ளார்.

அதில், “என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் அங்கமாக இருந்து என்னுடைய கனவை நிறைவேற்றுவதற்கு உதவியாக இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் இந்திய அணிக்கு விளையாடிய போதிலும் ஆர்சிபி ஆர்சிபி என கோஷம் எழுப்பி என்னை உற்சாகப்படுத்தினார். அவர்களை மிகவும் நேசிக்கிறேன், மேலும் மலோலன் ரங்கராஜன், பயிற்சியாளர் ஹெசன் சஞ்சய் பங்கர், பாசு மற்றும் ஸ்ரீராம் ஆகிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News