ENG vs IND, 1st Test: முதல் விக்கெட்டை இழந்த இந்தியா; நிதான ஆட்டத்தில் ராகுல்!

Updated: Thu, Aug 05 2021 17:46 IST
ENG v IND, 1st Test: England Strike Late After Rohit-Rahul Put On 97 In 1st Session (Image Source: Google)

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவுசெய்தது. 

அதில் அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 64 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இதையடுத்து கடைசி 13 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ராகுல் - ரோஹித் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்திருந்தது. 

இதையடுத்து ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இருவரும் தலா 9 ரன்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை  இன்று தொடங்கினர். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் எதிரணி பந்துவீச்சை சமாளித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின்னர் ரோஹித் சர்மா 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒல்லி ராபின்சன் பந்துவீச்சில் சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தர். அவரது விக்கெட்டுடன் உணவு இடைவேளையும் எடுக்கப்பட்டது. 

இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 97 ரன்களை எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை