Eng vs ind 1st test
WTC : இரண்டு புள்ளிகளை இழந்த இந்தியா - இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆட்டம் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில், அது பறிபோனது. இதனால் இந்த ஆட்டத்துக்கான புள்ளியை இரு அணிகளும் சமமாக (4-4) பகிா்ந்துகொண்டன.
இந்நிலையில் முதல் டெஸ்டில் இரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இரு அணிகளும் முதல் டெஸ்டில் பெற்ற 4 புள்ளிகளில் இருந்து தலா 2 புள்ளிகளை ஐசிசி நீக்கியுள்ளது. இதனால் தற்போது இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் 2ஆவது டெஸ்டில் நாளை விளையாடவுள்ளன. இதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் குறைவான ஓவர்களை வீசியதற்காக இரு அணிகளுக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்தும் 40% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.