இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனாது. அதன்பிம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 423 ரன்களை குவித்து இந்திய அணியை விட 345 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Advertisement

 இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சதமடித்ததுடன் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இச்சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத ஒரு சாதனையை முதல் ஆளாக படைத்து வரலாறு படைத்துள்ளார்.

அந்த சாதனையை யாதெனில் இந்த ஆண்டின் துவக்கத்தில் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்த ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான சென்னை டெஸ்டில் சதம் அடித்து தொடர்ச்சியாக 3 சதங்கள் விளாசி இருந்தார் அதேபோன்று தற்போது இத்தொடரில் மூன்று போட்டிகளில் மூன்று சதங்களை தொடர்ச்சியாக விளையாடியுள்ளார்.

இதன் மூலம் ஒரே ஆண்டில் இரு முறை தொடர்ச்சியாக மூன்று சதம் அடித்த முதல் டெஸ்ட் வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News