Rishabh Pant Records: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அரைசதம் கடந்ததன் மூலம் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் எம் எஸ் தோனி ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார். 

Advertisement

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பும் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் கேஎல் ராகுல் தனது சதத்தையும், ரிஷப் பந்த் தனது அரைசதத்தையும் பதிவுசெய்திருந்த கையோடு தங்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பந்த் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

1. இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்

இந்த இன்னிங்ஸில் ரிஷப் பந்த் இரண்டு சிக்ஸர்களை அடித்ததன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் எனும் சாதனையை படைத்தார். முன்னதக வெஸ்ட் இண்டீஸின் விவியன் ரிச்சர்ட்ஸ் 34 சிக்ஸர்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ரிஷப் பந்த் 36 சிக்ஸர்களை வீளாசி இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்

  • ரிஷப் பந்த் - 36
  • விவ் ரிச்சர்ட்ஸ் - 34
  • டிம் சவுத்தி - 30
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 27
  • ஷுப்மான் கில் - 26
Advertisement

2. டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள்

இதுதவிர்த்து இப்போட்டியின் ரிஷப் பந்த் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது இந்திய வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக ரோஹித் சர்மா 88 சிக்ஸர்களை அடித்து இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது ரிஷப் பந்தும் 88 சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் 91 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள்:

  • வீரேந்தர் சேவாக் - 91
  • ரிஷப் பன்ட் - 88
  • ரோஹித் சர்மா - 88
  • எம்.எஸ். தோனி - 78
  • ரவீந்திர ஜடேஜா - 72
Advertisement

3. எம்எஸ் தோனி சாதனை முறியடிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் எனும் பெருமையையும் ரிஷப் பந்த் பெற்றுள்ளார். முன்னதாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 21 டெஸ்ட் போட்டிகளீல் 1157 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்சமயம் ரிஷப் பந்த் 21 டெஸ்ட் போட்டிகளீல் 1158 ரன்களை எடுத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள்

  • ரிஷப் பன்ட் - 1158* ரன்கள் (12 டெஸ்ட்)
  • எம்எஸ் தோனி - 1157 ரன்கள் (21 டெஸ்ட்)
Advertisement

4. இங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர்

இது மட்டுமல்லாமல், இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்தின் டாம் பிளண்டல் கடந்த 2022ஆம் ஆண்டு 383 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், ரிஷப் பந்த் தற்போது 384 ரன்களைக் கடந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர்

  • 384* – ரிஷப் பந்த், 2025
  • 383 – டாம் பிளண்டல், 2022
  • 350 – வெய்ன் பிலிப்ஸ், 1985
  • 349 – ரிஷப் பந்த், 2021
  • 349 – எம்எஸ் தோனி, 2014
  • 340 – ஆடம் கில்கிறிஸ்ட், 2001
Also Read: LIVE Cricket Score
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News