நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில், நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு மிகவும் மோசமான ஒரு தொடராக அமைந்திருக்கிறது. நிச்சயமாக இது யாரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு. உலகக்கோப்பையின் துவக்க போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வலிமையான இடத்தில் இருந்து, தொடர்ச்சியாக தவறான நேரத்தில் விக்கெட்டை கொடுத்து, பேட்டிங்கில் 300 ரன் அடிக்க முடியாமல் சுருண்டார்கள். 

Advertisement

பின்பு நியூசிலாந்து அணியின் விக்கெட்டை கைப்பற்றாமல் பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றார்கள். இதற்கு அடுத்து இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார்கள். இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளிடம் பேட்டிங்கில் இருநூறு ரன்கள் கூட எடுக்க முடியாமல் படுதோல்விகளை சந்தித்தார்கள்.

Advertisement

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியின் வீரர்களின் பெயர்களை எழுதிப் பார்த்தால், பேட்டிங் யூனிட்டில் மிக வலிமையான அணியாக தெரியக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடிய ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் களத்தில் செயல்பாடு என்று வருகின்ற பொழுது அவர்கள் யாரும் தங்களுடைய தரத்திற்கு ஏற்ற வகையில் விளையாடவில்லை. தற்போது இங்கிலாந்து அணியின் பெரிய பிரச்சனையாக அவர்களுடைய செயல் ஒருங்கிணைப்புதான் இருந்து வருகிறது.

தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசி உள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மேத்யூ மோட், “எதுவும் நன்றாக இல்லை. நாங்கள் இந்த போட்டிக்கு வரும்பொழுது செய் அல்லது செத்துமடி என்கின்ற சூழ்நிலையில்தான் இருந்தோம் என்பது நன்றாகவே தெரியும். நாங்கள் பேட்டிங்கில் நல்ல விதமாகவே ஆரம்பித்தோம், பாசிட்டிவாகவே எல்லாம் தெரிந்தது. 

ஆனால் நாங்கள் அதற்கு அடுத்து விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து கொண்டே இருந்தோம். மேலும் பெங்களூரு அந்த விக்கெட்டில் 100 முதல் 120 ரன்கள் நாங்கள் குறைவாக எடுத்தோம். என்ன தவறு நடக்கிறது என்று எனக்குத் தெரியவே இல்லை. நான் இது குறித்து கேப்டன் பட்லர் உடன் உடனடியாக பேசினேன். இதை எப்படி என்று விளக்குவது மிகவும் கடினமான விஷயம். உலகக்கோப்பைக்கு முன்பாக உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு நல்ல ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்தினோம். 

உலகக்கோப்பை தொடரை வென்ற சில வீரர்கள் உடன் நாங்கள் இங்கு நல்ல நம்பிக்கையுடன் வந்தோம். ஆனால் உணர்ந்து கொள்ள முடியாதபடி தவறான நேரத்தில் வீரர்களில் சிலர் ஃபார்ம் இல்லாமல் இருப்பது பெரிய பிரச்சனைகளை உண்டு செய்திருக்கிறது. இது எங்களை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News