ஐபிஎல் தொடரை நடத்த இங்கிலாந்து கவுண்டி கிளப் விருப்பம்!

Updated: Thu, May 06 2021 18:49 IST
Image Source: Google

கரோனா அச்சுறுத்தல் மற்றும் வீரர்களுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்த இங்கிலாந்து கவுண்டி கிளப் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து வெளியான தகவலில், லண்டன், பர்மிங்ஹாம், எம்சிசி, லார்ட்ஸ் ஆகிய இடங்களை மையமாக கொண்டு ஐபிஎக் தொடரின் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடத்தி முடிக்க விரும்புவதாக இங்கிலாந்து கவுண்டி கிளப் பிசிசிஐயிடம் அனுமதி கோரியுள்ளது. 

மேலும் தொடரை சிறப்பான முறையிலும், வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளுடனும் தொடர் நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால், ஐபிஎல் தொடரை செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கிலாந்து கவுண்டி கிளப் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக தெரிகிறது. 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 30 போட்டிகளை ஒரு மாதத்தில் நடத்த முடியுமா என்ற கேள்வியும் கிரிக்கெட் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை