உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் 9 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி நிறைவு செய்துள்ளது.

Advertisement

இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன் ஸ்காட்லாந்து அணியை மட்டுமே ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியிருந்த நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட முன்னாள் சாம்பியன் அணிகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக 8 அணிகள் மட்டும் விளையாடும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஆஃப்கானிஸ்தான் அணி தகுதிபெற்றுள்ளது.

Advertisement

இந்திய மைதானங்களுக்கு ஏற்ப வீரர்கள், பேட்டிங் பிரச்சனைகளை, வேகப்பந்துவீச்சாளர்களின் எழுச்சி, சூழலுக்கு ஏற்ப பேட்டிங் என்று ஆஃப்கானிஸ்தான் அணியின் திட்டங்கள் அனைத்தும் ரசிகர்கள் மிரள வைத்தது. அதேபோல் இந்திய ஆடுகளங்கள் கூடுதலாக புரிந்து கொள்ள அஜய் ஜடேஜாவை அணிக்குள் கொண்டு வந்தது, ஜானத்தன் டிராடின் வியூகங்கள் உள்ளிட்டவை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு மிகச்சிறந்த உலகக்கோப்பை தொடராக அமைந்துள்ளது. 

இதுகுறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான், “ஆஃப்கானிஸ்தான் நாட்டில் எங்களை போல் ஏராளமான திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால் அங்கு கிரிக்கெட்டுக்கு தேவையான எந்த வசதிகளும் இல்லை. அகாடமி, மைதானங்கள், பயிற்சியாளர்கள், பயிற்சி அளிக்கும் வசதிகள் என்று எந்த வசதிகளும் இல்லை. ஆஃப்கானிஸ்தான் தேசிய அணிக்கு வந்த பின்னரே வீரர்கள் திறமையை வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

அண்மை காலங்களில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஏராளமான வீரர்கள் ஐபிஎல், பிக் பேஷ் உள்ளிட்ட ஏராளமான லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஆஃப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சிக்கு டி20 லீக்குகளும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News