வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணைக்கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

இந்நிலையில் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது தான் தற்போது சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா தொடரில் ரோஹித், ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 22ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ஓய்வு வழங்குவதன் அவசியம் என்ன என்று பலத்தரப்பு ரசிகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடாத ரோஹித் சர்மா, அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கொரோனா தொற்று காரணமாக இடம்பெறவில்லை. இதனால், ஐபிஎல் தொடருக்கு பிறகு கடந்த 40 நாளாக ஓய்வில் இருக்கும் ரோஹித், தற்போது தான் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் களமிறங்க உள்ளார்.

இந்நிலையில், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு வழங்குவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ள ரசிகர்கள், பிறகு ரோஹித் சர்மா எப்படி தான் கேப்டன் பதவியில் இருந்து அணியை வழிநடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 14 போட்டியில் விளையாட முடியும் ரோஹித்தால் நாட்டுக்காக தொடர்ந்து விளையாட முடியாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement

இதே போன்று விராட் கோலிக்கும் ஓய்வு வழங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் கோலி 20 ரன்களை தாண்டவில்லை. அப்படி இருக்க கோலிக்கு தொடர்ந்து ஓய்வு வழங்கினால் அவர் எப்படி பார்முக்கு திரும்புவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிஷப் பந்த் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு வழங்குவது முக்கியம். வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு கூட காயம் ஏற்படுவதை தடுக்க ஓய்வு வழங்கி இருக்கிறோம் என்று கூறினால் அதை ஏற்று கொள்ளலாம். 

ஆனால் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், சீனியர் வீரர்களின் பனிச்சுமையை குறைக்க தான் இந்த ஓய்வு வழங்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது ரசிகர்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News