ஜெய்ஸ்வாலை மூன்று வித கிரிக்கெட்டிலும் விளையாடவைக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!

Updated: Fri, Jun 16 2023 14:34 IST
Give Yashasvi Jaiswal debut in all formats of the game: Gautam Gambhir (Image Source: Google)

நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் இந்திய அணிக்கு இன்னும் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. உதாரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஆனால் விளையாடுவதற்கு பெரிதளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த சீசன் நன்றாக செயல்பட்டு இருப்பதால் வருகிற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் வாய்ப்புகள் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.

அதேபோல் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் பிசிசிஐ தலைமையில் பலரை கவர்ந்திருக்கிறது. ஆகையால் அவருக்கு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இடம் கொடுக்க உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கொல்கத்தா அணிக்கு பினிஷிங்கில் அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ரிங்கு சிங். ஓரிரு போட்டிகள் மட்டுமல்லாது தொடர் முழுவதும் அந்த ரோலில் சிறப்பாக செயல்பட்டதால் வருகிற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து பரிசோதிக்க உள்ளதாகவும் தெரிகிறது. 

டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் திலக் வர்மா மற்றும் சில இளம் பந்துவீச்சாளர்களுக்கும் விரைவில் டி20 அணிகளில் இடம் கொடுக்க இருப்பதாகவும் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், லக்னோ அணியின் ஆலோசகராக இருந்து வரும் கவுதம் கம்பீர் தனது சமீபத்திய பேட்டியில் இளம்வீரர் ஜெய்ஸ்வால் குறித்து கருத்துக்கள் தெரிவித்தார். அப்போது ஜெய்ஷ்வால் 3 ஃபார்மட்டிலும் விளையாட வேண்டும் என்று தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய அவர்,“ஜெய்ஸ்வால் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் இரட்டை சதம் மற்றும் மூச்சதம் அடித்து மும்பை கிரிக்கெட் அணிக்கு அதிக ரன்கள் குவித்தார். நல்ல ஃபார்மில் ஐபிஎல் தொடருக்குள் நுழைந்து சதம் மற்றும் அரைசதம் என வரிசையாக விளாசி ஐபிஎல் தொடரிலும் தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 600 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார்.

உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் டி20 இரண்டிலும் நேர்த்தியான அணுகுமுறையை ஜெய்ஸ்வால் வைத்திருக்கிறார். இளம் வயதில் இருக்கும் பொழுதே இவரை மூன்று ஃபார்மெட்டிலும் பயன்படுத்தி இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக உருவாக்க வேண்டும். இதுபோன்று மூன்று ஃபார்மெட்டிலும் விளையாடக்கூடிய வீரர்கள் அரிதிலும் அரிது. அவர்களை உரிய நேரத்தில் அடையாளம் கண்டு எடுப்பதே எதிர்கால இந்தியாவிற்கு பயனாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை