இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஒரு அளவுக்கு ஆஸ்திரேலியா அணியில் தாக்குப் பிடித்த வீரர் என்றால் அது பீட்டர் ஹான்ஸ்கோம்ப் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பீட்டர் ஹான்ஸ்கோம்ப், சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு சதம் வளாசினார். 

Advertisement

இதனால், அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர் தேர்வுக்குழுவினர்களும் அவரை ஓரங்கட்ட தொடங்கி விட்டனர். இந்த நிலையில் இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்க தனது இரண்டாவது சுற்று பயணமாக பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் வந்துள்ளார். இந்தியாவுக்கு வந்த அவர் டெல்லி டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சை எதிர்கொண்டு முதல் இன்னிங்சில் 72 ரன்கள் சேர்த்தார். 

Advertisement

எனினும் இரண்டாவது இன்னிங்சில் சொதப்பினார். இது குறித்து பேசிய அவர், “சுழற் பந்துவீச்சை ரஹானே விடமிருந்து தான் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தாம் கற்றுக் கொண்டேன். ரஹானே சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொண்டு விளையாடினார் என்பதை பார்த்து தமக்கு ஆச்சரியமாக இருந்தது.

பின் காலில் நின்று பந்தை எதிர்காண்டு, அதனை மிட் விக்கெட் திசையில் அவர் ரன்களை அடித்தார். இதை பார்க்கும் போது தனக்கு யாராவது இந்த யுத்தியை கற்றுக் கொடுங்களேன் என்று தமக்கு தோன்றியது. ரஹானேவின் இந்த யுக்தி மூலம் சுழற் பந்துவீச்சை தற்காத்துக் கொள்ளவும் அதே நிலையில இருந்து ரன் சேர்க்கவும் முடியும் என்பதை உணர்ந்தேன்.

டெல்லி டெஸ்டில் என்னை இந்தியா சுலபமாக வீழ்த்தி விட்டார்கள். நான் ரன் அடிக்க ஏதுவான வழியை அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.ஆனால் நான் மிகவும் பொறுமையாக நின்று பவுண்டரிகளை அடிக்காமல் வெறும் சிங்கிளாக ஓடி ரன்கள் சேர்த்ததேன். ஆனால் அவர்கள் என் ஆசையை தூண்டும் வகையில் சுலபமான பந்தை வீசி விரித்த வலையில் நான் சிக்கிக் கொண்டேன்.

அடுத்த டெஸ்டில் நான் மனதளவில் வலுவாக இருந்து பந்துவீச்சை எதிர்கொள்வோம். நாங்கள் எங்களுடைய பேட்டிங்கை நம்புகிறோம். டெல்லி டெஸ்டில் தங்களுக்கு சாதகமாக பல விஷயங்கள் நடந்தது. ஆனால் அதனை கடைசி நேரத்தில் வீணடித்து விட்டதது. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று விக்கெட்டுகளை கொத்தாக இழப்பதை தாங்கள் சரி செய்தாலே நாங்களும் ரன் குவித்து வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கை அளித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News