பாகிஸ்தான் ஒரு அவரேஜ் அணி தான் - ஹர்பஜன் சிங் கருத்து!

Updated: Wed, Sep 20 2023 20:59 IST
Image Source: Google

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க உதவும் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. தொடரை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. 

இதைதொடர்ந்து இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய அணியை அறிவித்துள்ளனர். தற்பொழுது இந்த உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் 10 அணிகளும் அதற்காக சிறந்த முறையில் தயாராவதற்கு மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில், இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு வரும் என்று, கிரிக்கெட் உலகின் பல நாட்டு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த வகையில் இந்தியாவின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்று மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் ஒரு சராசரியான அணியாக இல்லை. பாகிஸ்தான் டி20 கிரிக்கெட்டில் நல்ல அணியாக விளையாடுகிறது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அப்படி அல்ல. என்னுடைய முதல் மூன்று தேர்வுகளாக அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வருகின்றன. நான்காவது அணியாக நியூசிலாந்து வருகிறது. இதுதான் என்னுடைய உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை