இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஹர்பஜன் சிங்!

Updated: Wed, Jan 31 2024 15:18 IST
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஹர்பஜன் சிங்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹதராபாத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை மறுநாள் (பிப்.02) நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே இந்திய அணி சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இருப்பினும் அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் அவர்களுக்கு மாற்றாக ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், சௌரப் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எந்தெந்த வீரர்கள்  இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார்.

அவர் தேர்வுசெய்துள்ள அணியில் ஷுபம்ன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். மேலும் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கானை கேஎல் ராகுல் இடத்தில் கொண்டுவந்துள்ளார். மேலும் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோருடன் ஜஸ்ப்ரித் பும்ரா அவரது முதன்மை பந்துவீச்சு தேர்வாக உள்ளது. அதேசமயம் கடைசி இடத்தில் முகமது சிராஜ் அல்லது குல்தீப் யாதவ் இடம்பிடிக்கலாம என்று அவர் கணித்துள்ளார். 

ஹர்பஜன் தேர்வுசெய்த பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான், கேஎஸ் பாரத், வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்/குல்தீப் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை