இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா 2018ஆம் ஆண்டு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பந்து வீசாமல் அணியில் பேட்ஸ்மேனாக நீடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ள பாண்டியா நிச்சயம் பந்து வீசினால் மட்டுமே அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. ஆனால் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் இதுவரை பந்து வீசாமல் இருந்து வருகிறார்.

Advertisement

அவரது இந்த விவகாரம் தற்போது இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் பந்து வீசாமல் அணியில் நீடிப்பது கடினம் என்றும் நிச்சயம் அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதும் இந்திய அணியின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாண்டியாவின் பந்து வீச்சு குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை பாண்டியா ஒரு பந்து கூட முடியவில்லை. மேலும் இந்த தொடரில் அவர் ஒரு பேட்ஸ்மேனாகவே எங்களது அணியில் விளையாடி வருகிறார். பாண்டியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை கூற வேண்டுமென்றால் இந்த தொடர் முழுவதுமே அவர் பந்து வீசாமல் இருந்து வருகிறார். 

அவரது உடல்நிலையை மருத்துவர்கள், ட்ரைனர்கள், பிசியோ என அனைவரும் கவனித்து வருகின்றனர். மேலும் அவருடைய பந்து வீச்சிற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும் என்பதிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவர் பந்து வீசவில்லை என்றாலும் நாளுக்கு நாள் அவருடைய உடற்தகுதி முன்னேற்றம் அடைந்து வருகிறது. உலக கோப்பைக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதினால் நிச்சயம் உலக கோப்பை தொடரின் போது அவரால் பந்துவீச முடியலாம். 

ஆனால் இது குறித்த தெளிவான முடிவை மருத்துவர்கள் மற்றும் பிசியோ ஆகியோர் தான் கூறவேண்டும். என்னை பொறுத்தவரை பாண்டியா அடுத்த வாரத்திற்குள் பந்துவீசும் அளவிற்கு தயாராகி விடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News