ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. இதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தொடர்களை ஒய்ட் வாஷ் செய்து வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்த இந்தியா புதிய உலக சாதனை படைத்து கோப்பையை வென்றது.

Advertisement

முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிவதற்காக நடைபெற்ற இந்த தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய திறமையை காண்பித்தனர். அதில் முதலிரண்டு போட்டிகளில் மொத்தம் 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்களை எடுத்த ஷிவம் துபே ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Advertisement

கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் கடந்த வருடம் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்ல உதவிய அவர் தற்போது சீனியர் அணியிலும் தொடர் நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.

இதனால் அடிக்கடி காயமடைந்து வெளியேறும் பாண்டியாவுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரையுமே தேர்வு செய்யலாம் என்று ஜாம்பவான் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 6ஆவது பவுலர் குறையை போக்குவதற்கு 2 விக்கெட் கீப்பருக்கு பதிலாக 2 ஆல் ரவுண்டர்களை தேர்வு செய்யலாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர். “இது உங்களுக்கு 6ஆவது பவுலர் வேண்டுமா அல்லது 5 பவுலர்கள் போதுமா என்பதை பொறுத்து அமையும். இதில் நீங்கள் எந்த வழியில் செல்கிறீர்களோ அதை பொறுத்து முடிவெடுக்கலாம்.

ஒருவேளை உங்களுக்கு 6ஆவது பவுலர் தேவையென்று நினைத்தால் அதற்கான பேக்-அப் அவசியமாகும். அது போன்ற சூழ்நிலையில் 2 விக்கெட் கீப்பர்களுக்கு பதிலாக ஒருவரை மட்டும் தேர்வு செய்தால் உங்களால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரையும் உலகக் கோப்பையில் தேர்வு செய்ய முடியும்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியில் துபே அசத்தும் பட்சத்தில் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News