இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவத்திலும் ரோஹித் சர்மா கேப்டன் ஆக இருந்தாலும், டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு தற்காலிகமாக டி20 இந்தியா அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். டி20 உலகக்கோப்பைக்கு பிறகு எட்டு போட்டிகளில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்திருக்கிறார். இதில் 5 போட்டிகளில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் முடிவில்லாமல் அமைந்திருக்கிறது.

Advertisement

அடுத்த நான்கு மாதத்தில் இந்தியாவில் 50 உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்பது உறுதி. இந்த நிலையில் இதற்கு அடுத்து வரக்கூடிய உலகக்கோப்பைகளில் எப்படியான அணியும் கேப்டனும் இருப்பார்கள்? என்கின்ற கேள்விகள் இருக்கிறது. தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை வெளிப்படையாக விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

Advertisement

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது, “எல்லோரும் விளையாடும் வாய்ப்பை பெறலாம். ஆனால் ஹர்திக் பாண்டியாதான் தலைமை தாங்குவார். 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை வர இருக்கிறது. எனவே இந்த உலகக் கோப்பையில் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே இருப்பார். இதற்கு தேர்வு குழு ஒரு புதிய திசையைப் பார்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

தற்போது இளைஞர்கள் மத்தியில் நிறைய திறமைகள் உள்ளன. தற்போது உங்களிடம் ஒரு புதிய அணி இருக்கலாம். இல்லாவிட்டாலும் நிச்சயம் அந்த அணியில் புதுமுகங்கள் இருக்கும். இந்தியா அடுத்து விளையாடும் டி20 போட்டியில் இன்னும் நிறைய பேர் விளையாடுவார்கள். சிலபல புதிய முகங்கள் இருக்கும். ஏனெனில் இந்த ஆண்டு புத்துணர்ச்சி ஊட்டும் சில இளம் திறமைகள் காணப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த முறை 2007 உலகக்கோப்பை பாணியில் செல்வார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு அவர்கள் திறமைகளை அடையாளம் காண்பார்கள். தேர்வுக்கு வரும் பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கு நிறைய வீரர்கள் இருப்பார்கள். ஹர்திக் பாண்டியாவின் யோசனைகளும் வித்தியாசமாகத்தான் இருக்கும். அவர் ஒரு உரிமையாளரின் அணிக்கு கேப்டனாக இருந்து ஐபிஎல் தொடரை பார்த்திருக்கிறார். மற்றும் பல வீரர்கள் பற்றி அவருக்கு ஒரு உள் மதிப்பீடு இருக்கும்.

சீனியர் வீரர்கள் குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் பேச வேண்டும். ஏனென்றால் அவர்தான் வீரர்களை பூங்காவுக்கு வெளியே அழைத்துச் செல்ல போகிறவர். அவர் என்ன கேட்கிறாரோ அதை கொடுக்க வேண்டும் அவர் என்ன பேசுகிறாரோ அதைக் கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News