தீப்தி ஷர்மா இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை ரன் அவுட் (மான்கட்) செய்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக போகிறது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் இந்தியா ஒயிட் வாஷ் செய்ததை இங்கிலாந்து நாட்டினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் இன்னமும் தீப்தி சர்மா குறித்தும் இந்திய மகளிர் அணி குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

இதற்கு நேற்று ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி, இங்கிலாந்துக்கு தக்க பதிலடி தந்த நிலையில் தற்போது ஹர்ஷா போக்லே ட்விட்டரில் நீண்ட பதிவு ஒன்றை போட்டு இங்கிலாந்தை வெளுத்து வாங்கி இருக்கிறார். 

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கிலாந்து ஊடகங்கள் தொடர்ந்து மான்கட் விவகாரத்தில் ஒரு இளம் வீராங்கனைய குறித்து கேள்வி எழுப்பி வருவது வேதனை அளிக்கிறது. தீப்தி சர்மா ஐசிசி விதியின் படியே நடந்திருக்கிறார். சார்லி டீன் தொடர்ந்து அந்த தவறை செய்து வந்தது மூலம் அவருக்கு சாதகமாக அமைந்தது. இங்கிலாந்து உடைய கலாச்சாரமே அதுதான். உலக கிரிக்கெட்டை ஆண்டவர்கள் என்ற திமிர் இன்னும் அவர்களுக்கு இருக்கிறது. 

இங்கிலாந்து எதை தவறு என்று சொல்கிறார்களோ நாமும் அதை தவறு என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க புத்தி இன்னும் இங்கிலாந்து கடைப்பிடித்து வருகிறது.இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் செயல்படுத்தும் ஒன்றை மற்ற கிரிக்கெட் நாடுகளும் மதிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

இதேபோன்று ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் அது மோசமான ஆடுகளம் என்றும், வேக பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் நல்ல ஆடுகளம் என்றும் இங்கிலாந்து நினைக்கிறது. அதே கலாச்சாரத்தை நாமும் கடைப்பிடித்து வருகிறோம்.

Advertisement

பந்துவீச்சாளர்கள் முனையில் உள்ள பேட்ஸ்மனை ரன் அவுட் ஆக்க கூடாது என்று உலக நாடுகளுக்கு இங்கிலாந்து சொல்கிறது. அப்படி அவுட் செய்யும் நபர்களை இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். ஆனால் இனியும் எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. மற்ற நாடுகளில் அடிமைத்தன புத்தியில் இருந்து விலகச் சொல்லி நாங்களும் கேட்போம். விதிகள் படி விளையாடுவது மிகவும் சுலபம். உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்.

ஐசிசியின் விதிப்படி பந்துவீச்சாளர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கோட்டுக்கு உள்ளே இருக்க வேண்டும். நீங்கள் அதை மதித்தால் விளையாட்டு சிறப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் தொடர்ந்து மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்கள் மீதும் கேள்விகள் வீசப்படும். தொடர்ந்து தீப்தி சர்மா மீது விமர்சனம் வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐசிசி பொறுப்பில் உள்ளவர்கள் இதனை தடுக்க முன்வர வேண்டும்” என்று இங்கிலாந்து அணியை கடுமையான விமர்சித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News