ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா 40 ரன்களும், கில் 23 ரன்களும் எடுக்க கோலி, ஸ்ரேயாஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

Advertisement

இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் ஆட்டம் இழக்க கடைசி வரை நின்று விளையாடிய விராட் கோலி 101 ரன்கள் சேர்த்தார்.இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினை விராட் கோலி சமன் செய்து இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சாதனை சமன் செய்யப்பட்டதற்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Advertisement

அதில், “விராட் கோலி நீங்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறீர்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் எனக்கு 49 இருந்து 50 வயது ஆக 365 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நீங்கள் 49 லிருந்து 50 வந்து என்னுடைய ரெக்கார்டை இன்னும் சில தினங்களிலே நீங்கள் முறியடிப்பீர்கள் என நான் நம்பிக்கை கொள்கிறேன். வாழ்த்துக்கள்” என்று சச்சின் பாராட்டி உள்ளார்.

 

இதுபோன்று அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “சச்சின் போன்ற மாபெரும் மனிதனின் அதிக ஒரு நாள் போட்டிக்கான சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்து இருக்கிறார். அதுவும் அவருடைய பிறந்தநாள் அன்று வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. விராட் கோலிக்கு நான் தலைவணங்குகிறேன்.இந்த சதத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். 100 சதத்தை நோக்கி செல்லுங்கள் என்றும் பாரத் மீது உள்ள காதலுடன்” என்று சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News