இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து ஆட்டம் முடிந்த உடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூர்யகுமாரை நேர்காணல் செய்தார். கல்லூரி காலத்தில் நமக்கு பிடித்த பேராசிரியர், நம்முடன் ஜாலியாக உரையாடினால் எப்படி இருக்குமோ, அதே போல் இந்த நேர்காணல் அமைந்தது. நேர்காணலை தொடங்கும் போதே சூர்யகுமார் அவருடைய சிறு வயதில் என்னுடைய பேட்டிங்கை பார்த்திருக்க மாட்டார். அதனால் தான் இப்படி அதிரடியாக விளையாடுகிறார் என்று டிராவிட் கிண்டல் செய்தார்.

Advertisement

அதற்கு சூர்யகுமார் யாதவ், நிச்சயமாக உங்களுடைய பேட்டிங்கை பார்த்து தான் வளர்ஙநதேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய டிராவிட், ஒவ்வொரு முறையும் நாங்கள் பார்த்ததிலேயே இது தான் சிறந்த டி20 இன்னிங்ஸ் என்று நினைப்போம். ஆனால், அதன் பிறகும் எப்படி அதனை விட சிறந்த இன்னிங்சை விளையாடி எங்களை ஆச்சரியப்படுத்துகிறீர்கள் என்று கேட்ட டிராவிட், உங்களுடைய டாப் இன்னிங்ஸ் என்றால் எதை சொல்வீர்கள் என்றார்.

Advertisement

அதற்கு பதில் அளித்த சூர்யகுமார், “ஒவ்வொரு முறையும் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் செய்ய களத்திற்கு செல்வதை விரும்புகிறேன். அனைத்து இன்னிங்சையும் ஒரே மாதிரியாக தான் விளையாடுகிறேன். இதில் எது பெஸ்ட் என்று கூறுவது சிரமம். பயிற்சி செய்யும் போது, மனதிற்குள் ஃபில்டர்கள் நிற்பதை போல் நினைத்து பயிற்சி செய்வேன்.

பயிற்சியின் போது பேட்டில் பந்து படும் சத்தத்தை வைத்தே, நாம் பந்தை சரியாக அடித்தோமா என்பதை முடிவு செய்து கொள்வேன். டி20 கிரிக்கெட்டில் அணிகள் எந்த சமயத்தில் போட்டியில் கொஞ்சம் அமைதி காப்பார்களோ, அந்த நேரத்தில் நான் அதிரடியாக விளையாட வேண்டும் என நினைத்தேன். பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் முன்பே மைதானத்தின் எந்த திசையில் ரன் அடிக்க வேண்டும் என்று கணித்து விளையாடுகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் உடல் தகுதி எப்படி இருந்ததது, யோ யோ டெஸ்டை எப்படி தேர்ச்சி பெற்றீர்கள் என்று நியாபகம் இருக்கிறதா என்று டிராவிட் கேட்டார். அதற்கு சிரித்து கொண்டு பதில் அளித்த சூர்யகுமார், கண்டிப்பாக நீங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தீர்கள். அப்போது யோ யோ டெஸ்டில் தேர்ச்ச பெறவதற்காக ஒரு டைவ் அடித்து எல்ல கோட்டை அடைந்தேன். அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

நம் உடல் தகுதி எந்த அளவுக்கு இருக்கிறது என தெரிந்து கொண்டேன். அதன் பிறகு என் மனைவி தான் எனைக்கு நல்ல உணவ பழக்கத்தை கற்று கொடுத்தார். எதை சாப்பிட வேண்டும், எந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினார். என் மனைவி மற்றும் குடும்பம் என்னுடைய வெற்றிக்கு பின்னால் நிற்கிறார்கள்.

Advertisement

என்னுடைய குடும்பத்தில் யாரும் விளையாட்டு துறையில் இருந்ததில்லை. நான் தான் முதல் ஆல். அதற்காகவே தந்தையின் அபிமாணத்தை பெற கடுமையாக உழைத்தேன். என்னுடைய ஆர்வத்தை பார்த்து அவர்களும் எனக்காக பல தியாகங்களை செய்து இருக்கிறார்கள்” என்று தொரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய டிராவிட், இதே போன்று நீங்கள் தொடர்ந்து விளையாடி எங்களை மகிழ்ச்சி படுத்துங்கள் என்று கூறினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News