வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இதற்கான வேலைகளில் எல்லா அணிகளும் தற்போது இருந்தே ஈடுபட்டு வருகின்றன. ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் அணிகளின் பயிற்சி முகாம்கள் தற்போது அந்தந்த அணிகளின் ஹோம் கிரவுண்டுகளில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் எல்லா ஐபிஎல் அணிகளின் ஹோம் கிரவுண்டுகளிலும் நடக்க இருப்பதால் ரசிகர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

முன்னதாக, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி தங்களது முதல் தொடரிலேயே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக பிளே ஆப் சுற்று போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்காக அந்த அணி சிறப்பாக தயாராகி வருவதாக அணியின் மெண்டார் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான டீம் ஜெர்சி வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் கே எல் ராகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கேஎல் ராகுல், “ஸ்ட்ரைக் ரேட் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் ரேட் என்பது அணியின் சூழ்நிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை நாம் எடுக்க வேண்டிய ரன்கள் எல்லாவற்றையும் பொருத்தே அமையும். நீங்கள் 140 ரன்கள் துரத்திச் செல்லும் போது 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஸ்ட்ரைக் ரேட் என்பது நாம் அந்த நேரத்தில் இருக்கும் சூழ்நிலையை பொறுத்து அமையக்கூடிய ஒன்று” என தெரிவித்தார்.

ஐபிஎல் தொடர்கள் மற்றும் சர்வதேச போட்டிகளிலும் கேஎல் ராகுலின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளின் போது கூட கேஎல் ராகுல் தூக்கத்தில் மெதுவாக ஆடியதாக அவர் மீது சர்ச்சைகள் இழந்தது. ஐபிஎல்  தொடர்களிலும் அவர் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் மீதான விமர்சனம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

மேலும் கே எல் ராகுலின் டெஸ்ட் போட்டி ஃபார்ம் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கண்களை குவிக்க தவறிய கேஎல் ராகுல் மூன்றாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நாளை நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News