நாங்கள் தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்துவீச்சை தொடங்கவில்லை - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களைக் குவித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் நாதன் எல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியினாது முடிவு எட்டப்படாமல் ரத்து செய்ய படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 4 புள்ளிகளைப் பெற்றதுடன், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து போட்டி முடிவின் அடிப்படையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால் தென் ஆப்பிரிக்காவை குறைந்தபட்சம் 207 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதேசமயம் சேஸிங் செய்தால் அந்த அணி 300 ரன்கள் என்ற இலக்கை 11.1 ஓவர்களுக்குள் எட்ட வேண்டும். இதனல நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடைரின் அரைறுதி போட்டிக்கு தென் ஆப்பிரிக்க அணி முன்னேறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடாத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய ஆஃபானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, “துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆட்டம் எந்த முடிவும் இல்லாமல் போனது. நல்ல ஆட்டமாக இருந்தது. நாங்கள் 300+ ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அவர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக பந்து வீசினர். 270 ரன்கள் நல்ல ஸ்கோராக இருந்தது, ஆனால் நாங்கள் தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்துவீச்சை தொடங்கவில்லை. இதிலிருந்து நங்கள் கற்றுக்கொள்வோம்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் செதிகுல்லா அடல் மிகவும் சிறப்பாக விளையாடினார், முதல் இரண்டு ஆட்டங்களில் அவர் நாங்கள் எதிர்பார்த்த விதத்தில் விளையாடவில்லை, ஆனால் அவரது மறுபிரவேசம் நன்றாக இருந்தது. அவருக்கு இது முதல் ஐசிசி நிகழ்வு, அவர் அழுத்தத்தின் கீழ் நன்றாக விளையாடினார். உமர்சாய் சிறந்த தரவரிசையில் உள்ளார், அதனால்தான் அவர் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் எப்போதும் எங்களுக்காக சிறப்பாக செயல்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.