பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது சுயசரிதையை சுல்தான் என்ற பெயரில் புத்தகமாக எழுதி உள்ளார். சுல்தான் புத்தகத்தில் ஒரு நினைவுக் குறிப்பு பற்றிய விவாதத்தின் போது வாசிம் அக்ரம் சென்னை விமான நிலையத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

அதில், “அக்டோபர் 2009 ஆம் ஆண்டு நான் என் மறைந்த மனைவியுடன் சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்தேன். எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் விமானம் தரையிறங்கியது. எனது மனைவி மயக்கமடைந்தாள், நான் அழுகிறேன். எங்களிடம் இந்திய விசா இல்லை. எங்கள் இருவரிடமும் பாகிஸ்தான் பாஸ்போர்ட்ஸ் மட்டும் இருந்தது. 

Advertisement

இருந்தாலும் அங்கு இருந்தவர்கள் என்னை விமான நிலையத்தில் அங்கீகரித்தனர். "சென்னை விமான நிலையத்தில் உள்ளவர்கள், பாதுகாப்புப் படைகள் மற்றும் சுங்க மற்றும் குடிவரவு அதிகாரிகள் விசாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள். இந்த சம்பவத்தை கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதனாகவும் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று அக்ரம் கூறினார்.

சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு,மாரடைப்பால் அக்ரம் மனைவி ஹுமா சென்னையின் அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். மேலும் 1999 சென்னை டெஸ்ட் போட்டி குறித்து அவர் பேசினார், அதில் பாகிஸ்தான் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுபற்றி பேசிய அக்ரம், "சென்னை டெஸ்ட் போட்டி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நேரத்தில் சக்லைன் முஷ்தாக் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரும் எங்களிடம் இருந்தார். யாராலும் முடியவில்லை அந்த நேரத்தில் அவர் கண்டுபிடித்த துஸ்ரா பந்துவீச்சில் யாராலும் ரன் எடுக்க முடியவில்லை.

சச்சின் முதல் இன்னிங்சுக்குப் பிறகு அவரது பந்தில் நன்றாக விளையாடினார். ஒவ்வொரு முறையும் அவர் துஸ்ராவை வீசும்போது சச்சின் கீப்பருக்குப் பின்னால் சென்று பந்தை அடித்தார். அதனால்தான் சச்சின் எல்லா காலத்திலும் மிக திறமையானவர்” என்று அவர் கூறினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News