மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை: பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டு தடை!

Updated: Fri, Jan 28 2022 20:08 IST
ICC Bans Brendon Taylor From All Forms Of Cricket For Three And A Half Years (Image Source: Google)

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் டெய்லர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என ஜிம்பாப்வே அணியை கேப்டனாக வழிநடத்திய பிரெண்டன் டெய்லர் மிகச்சிறந்த பேட்ஸ்மேனும்கூட. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பிரெண்டன் டெய்லர் வெளியிட்டுள்ள அறிக்கை ஜிம்பாப்வே மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் உலகத்தையும் சற்று அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்திய பயணத்தின்போது இந்திய தொழிலதிபர் ஒருவரால் அவருக்கு ஏற்பட்ட சங்கடமான நிகழ்வைதான் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. 

மேலும் இப்போது, எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பல ஆண்டு தடை விதிக்க ஐசிசி முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை நானும் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு சூதாட்ட அணுகுமுறையையும் உடனே ஐசிசிக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்கு எனது கதை ஒரு பாடமாக இருக்கும் நம்புகிறேன். 

கிரிக்கெட் என்னும் அழகான விளையாட்டின் மீதான எனது காதல், என் வழியில் வீசப்படும் எந்த அச்சுறுத்தல்களையும் விட அதிகமாக உள்ளது. நான் உருவாக்கிய இந்தக் குழப்பத்தில் இருந்து மீள முயன்று வருகிறேன்" என்று அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

தனது தவறை பிரெண்டன் டெய்லர் வெளிப்படையாக ஓப்புக்கொண்டாலும், அவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பெரும் விவதமாக வெடித்திருந்தது. 

இந்நிலையில், பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஐசிசி முழுவதுமாக தடைவிதித்து உதரவிட்டுள்ளது. அதன்படி 2025ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதிக்கு பிறகு அவர் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை