இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் கரோனா பரவல் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டும் உலக கோப்பை தொடரை வேறு நாட்டில் நடத்துவது குறித்தும் ஐசிசி ஆலோசித்து வருகிறது.
Advertisement
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ஏற்கெனவே 16 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில், மேலும் நான்கு அணிகளை சேர்க்கலாம் என்று ஐசிசி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகளை கொண்டு போட்டிகளை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.