ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இன்று புனேவில் நடைபெற்றுவரும் 17ஆவது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

Advertisement

அதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹாசன் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்கள். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 51 ரன்கள் எடுத்திருந்த தன்ஸித் ஹசன் 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தாஹித் ஹிரிடோயும் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த முஷ்பிக்கூர் ரஹீம் - மஹ்முதுல்லா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை 200 ரன்களைக் கடக்கச் செய்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முஷ்பிக்கூர் ரஹீம் 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை போரடிய மஹ்முதுல்லா 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை 4 ரன்களில் தவறவிட்டார். இதனால் 20 ஒவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தறவிட்டார்.

Advertisement

அதேசமயம் மறுப்பாகம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 53 ரன்களில் ஷுப்மன் கில்லும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - கேஎல் ராகுல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 26,000 ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

அதன்பின்னும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 48ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 41.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 103 ரன்களைச் சேர்த்தார்.   

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News