இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-2 சமன் செய்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த சுற்றுப் பயணத்தில் பந்துவீச்சு வியக்கத்தக்க வகையில் இருந்தது. அதேபோல் பேட்டிங்கிலும் இந்தியா சிறப்பாகத்தான் செயல்பட்டது. பீல்டிங்கும் ஒருசில நேரத்தை தவிர அபாரமாகத்தான் இருந்தது.

Advertisement

இருப்பினும் விராட் கோலியின் ஆட்டம்தான் இங்கு மீண்டும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஐபிஎல் முடிந்தப் பிறகு கிட்டதட்ட ஒருமாத ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அவர் 11, 20 போன்ற சொற்ப ரன்களை மட்டுமே சேர்த்தார். மேலும் டி20 தொடரிலும் இரண்டு இன்னிங்ஸ்களில் 12 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

Advertisement

இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த விராட் கோலி, ஒருநாள் தொடரில் 17, 16 போன்ற சொற்ப ரன்களை மட்டும் சேர்த்து, மீண்டும் சொதப்பினார். 2019ஆம் ஆண்டிற்கு பிறகு 78 சர்வதேச இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள கோலி, அதில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்த விமர்சனமும் கோலிமீது இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், “கோலியுடன் தனியாக அமர்ந்துபேச 20 நிமிடம் கிடைத்தால் போதும். அவர் பார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து என்னால் தெளிவாக விளக்க முடியும். குறிப்பாக ஆஃப் ஸ்டெம்ப் லைனில் அவர் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து பேசுவேன்.

கோலி தொடர்ந்து ஆஃப் ஸ்டெம்ப் லைனில்தான் ஆட்டமிழந்து வருகிறார். அது இவருடைய பலவீனமாக மாற ஆரம்பித்துள்ளது. அவர் முதல் போட்டியில் ஆஃப் ஸ்டெம்ப் லைனில் ஆட்டமிழந்த பிறகு, அடுத்த போட்டியில் அதே மாதிரி வரும் பந்துகளுக்கு எதிராக பெரிய ஷாட் அடிப்பதில்லை

இது அனைத்து பேட்டர்களும் செய்யும் விஷயம்தான். அந்த தவறை கோலியும் செய்யக் கூடாது. அவர் ஆஃப் ஸ்டெம்ப் லைனில் சிறப்பாக விளையாட கூடியவர். அவுட் ஆனாலும் பரவாயில்லை என தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அப்படி செய்தால், நிச்சயம் ரன்கள் வரும்’’ எனத் தெரிவித்தார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News