ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய துயாப் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷாய் ஹோப் மற்றும் பென் டங்க் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் ஷாய் ஹோப் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் பென் டங்க் 28 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் 13 ரன்களுக்கும், கேப்டன் சிக்கந்தர் ரசா 28 ரன்களுக்கும், ரோவ்மன் பாவெல் 25 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய தசுன் ஷனகா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 33 ரன்களைச் சேர்த்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய குல்பதின் நைப் 15 ரன்களுக்கும், குக்லெஜின் 4 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. கல்ஃப் ஜெயண்ட்ஸ் தரப்பில் மார்க் அதிர் மற்றும் அயான் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கல்ஃப் அணியில் கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரானும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய தொடக்க வீரர் ஆடம் லித் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து ஜோர்டன் காக்குசும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 88 ரன்களைச் சேர்த்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி அணியை விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் எராஸ்மஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எராஸ்மஸ் 50 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதில் அரைசதம் கடந்து அசத்திய எராஸ்மஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News