விராட் கோலிக்கு அதிக ஈகோ உள்ளது - ஒல்லி ராபின்சன்!

Updated: Fri, Jan 19 2024 22:12 IST
விராட் கோலிக்கு அதிக ஈகோ உள்ளது - ஒல்லி ராபின்சன்! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் இந்தியாவை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அதிரடியாக விளையாடி வீழ்த்தி சாதனை படைக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது.

இந்நிலையில் தன்னுடைய சொந்த மண்ணில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கலாம் என்ற ஈகோ இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருப்பதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் தெரிவித்துள்ளார். எனவே அந்த ஈகோவை அடக்கி இந்த தொடரில் விராட் கோலிக்கு சவால் கொடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், "எப்போதும் நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள். மேலும் நீங்கள் எப்போதுமே சிறந்த வீரர்களை அவுட் செய்ய விரும்புவீர்கள். விராட் கோலி அது போன்ற ஒரு வீரர். அவர் அதிக ஈகோ கொண்டுள்ளார். குறிப்பாக இந்தியாவில் எதிரணி பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவிக்கலாம் என்று அவர் நினைப்பார். இதற்கு முந்தைய தொடர்களிலும் நாங்கள் மோதியுள்ளோம். எனவே இம்முறையும் அதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அடுத்த சில வருடங்களில் எங்களுடைய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு நான் தலைவராக இருப்பேன் என்பதை உணர்ந்து அதற்கேற்றார்போல் பயிற்சிகள் செய்து வருகிறேன். தற்போது நல்ல முதிர்ச்சியடைந்துள்ள நான் இத்தொடரை மற்றுமொரு சாதாரண தொடராக நினைத்து பயிற்சி எடுக்கிறேன். தற்போதைக்கு எங்களுடைய பவுலிங் கூட்டணியின் தலைவராக நான் என்னை நினைக்கவில்லை. மாறாக சிறப்பாக விளையாடி அணிக்கு ஆதரவு கொடுக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை