இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் ஹைதராபாத்தில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர் ஷுப்மன் கில் 149 பந்துகளில் 19 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 208 ரன்களை குவித்து அசத்தினார். கேப்டன் ரோஹித் சர்மா 34, சூர்யகுமார் யாதவ் 31, ஹார்திக் பாண்டியா 28 ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இதனால், இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை குவித்தது.

Advertisement

இதையடுத்து, இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ஃபின் ஆலனை 40 ரன்களை எடுத்தார். ஆலனை தவிர கான்வே 10, ஹென்ட்ரி நிகோலஸ் 18, டேரில் மிட்செல் 9 போன்ற முதல் வரிசை பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இறுதியில் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 12 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உட்பட 140 ரன்களை குவித்து அசத்தினார்.

தொடர்ந்து மிட்செல் சாண்ட்னரும் 57 பெரிய ஸ்கோர் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவருக்கு 20 ரன்கள் தேவைப்பட்டபோது, ஷர்தூல் தாகூர் வீசிய அந்த ஓவரில் ப்ரேஸ்வெல் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த நிலையில், அடுத்த பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதுதான், அந்த அணியின் கடைசி விக்கெட்டாக இருந்ததால், நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337/10 ரன்களை சேர்த்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “பிரேஸ்வெல் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டும்தான், எங்களால் வெற்றியைப் பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். சிராஜ் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். டெஸ்ட், டி20 மட்டுமல்ல தற்போது ஒருநாள் தொடரிலும் அவர் சிறப்பாக பந்துவீசி வருவது இந்திய அணிக்கு மகிழ்ச்சியான செய்திதான்.

ஷுப்மன் கில்லின் ஃபார்மை நாங்கள் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள விரும்பினோம். ஆகையால்தான், தொடர்ந்து  களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறார்” எனக் கூறினார்.

Advertisement

இதன்மூலம், இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மன் கில்தான் ஓபனராக களமிறங்குவார் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News