அடுத்த மாதம் 16ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இந்தாண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது.

Advertisement

அதன்படி, இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் பாகிஸ்தான், குரூப் ஏ ரன்னர், தென்னாப்பிரிக்க அணி, வங்கதேச அணி, குரூப் பி வின்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பிரதான சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 22ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெறும்.

Advertisement

இதில் அக்டோபர் 23ஆம் தேதி, இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அடுத்து 27ஆம் தேதி குரூப் ஏ ரன்னர், 30ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 2, 6 ஆகிய தேதிகளில் வங்கதேசம், குரூப் பி வின்னர் அணியுடன் மோதவுள்ளது.

குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், குரூப் ஏ வின்னர், குரூப் பி ரன்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா, முதுகு வலி பிரச்சினை காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ஏற்கனவே, ஜடேஜாவும் விலகியிருந்தார். இந்திய அணியின் பந்துவீச்சு துறை பலவீனமாக இருக்கும் நிலையில், இப்படி இரண்டு முக்கிய பௌலர்கள் இல்லாததால், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி படுமோசமாக சொதப்பும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் பும்ராவுக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது. 

Advertisement

முன்னதாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகமது சிராஜை அணியில் சேர்த்துள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News