மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி வரை போராடி இந்தியா அதிர்ச்சி தோல்வி!

Updated: Sat, Feb 18 2023 21:45 IST
India have still never beaten England at the Women's T20 World Cup! (Image Source: Google)

மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நட் ஸ்கைவர் பிரண்ட் அரைசதம் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அந்த அணியின் எமி ஜோன்ஸ் 40 ரன்களும், கேப்டன் ஹீதர் நைட் 28 ரன்களும் எடுத்தனர். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரேனுகா சிங் 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 8 ரன்களில் ஆட்டைழக்க, பின்ன்ர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்கள் என அடுத்தது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா - ரிச்சா கோஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ஸ்மிருதி மந்தனா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ரிச்சா கோஷ் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை