இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நவம்பர் 8ஆஅம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேசமயம் இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்

Advertisement

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மற்றும் இளம் இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 சர்வதேச போட்டியில் மீண்டும் ஒருமுறை தொடாக்க வீரராக களமிறங்குவார்கள். இதில் சஞ்சு சாம்சன் கடைசி டி20 சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரர் களமிறங்கியதுடன் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.

மறுபுறம், அபிஷேக் சர்மா பெரிதளவில் ரன்களை சேர்க்க தவறிய நிலையிலும், அணி நிர்வாகம் அவர் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்திலும், திலக் வர்மா நான்காம் இடத்திலும் களமிறங்க கூடும். மேற்கொண்டு ஐந்தாம் இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், ஃபினிஷர்களாக ரிங்கு சிங் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தேர்வுசெய்யப்படலாம்.

 

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள்

Advertisement

இந்திய அணியின் பந்துவீச்சு பற்றி பேசினார், ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், அர்ஷ்தீப் சிங் மீண்டும் இந்திய அணியின் பந்துவீச்சை வழிநடத்த உள்ளார். இது தவிர இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளுக்கு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்க்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கக்கூடும். அவர்களுடன் அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா ஆகியோரும் பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், யாஷ் தயால், அவேஷ் கான்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News