மேல் சிகிச்சைக்கு ஜெர்மனி செல்லும் கேஎல் ராகுல்!

Updated: Thu, Jun 16 2022 16:29 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டதால், கேஎல் ராகுல் தான் இந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்துவதாக இருந்தது.

ஆனால் கேஎல் ராகுல் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியதால் ரிஷப் பந்த் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். 

அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று ஒருநாள், டி20 தொடர்களில் ஆடுகிறது. கடந்த ஆண்டு இந்திய அணி  இங்கிலாந்து சென்றபோது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. கரோனா காரணமாக ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த போட்டி எட்ஜ்பாஸ்டனில் ஜூலை ஒன்றாம் தேதிதொடங்கி நடக்கிறது.

இந்நிலையில் காயம் காரணமாக அந்த ஒரு டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிக்கான அணியில் கேஎல் ராகுல் இல்லை. இதற்கிடையில் அவரது காயத்திற்கு மேல்சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லவுள்ளார் கேல் ராகுல் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இத்தகவலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இத்தொடருக்கான இந்திய அணி நேற்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்தது. அதேபோல் தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடும் வீரர்களும் தொடர் முடிந்த கையோடு இங்கிலாந்து செல்லவுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை