தாயகம் திரும்பிய எட்டு இங்கிலாந்து வீரர்கள்; மற்றவர்களின் நிலை?

Updated: Wed, May 05 2021 20:04 IST
IPL 2021: 8 of the 11 English players back in the UK, in hotel quarantine (Image Source: Google)

காரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. 

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் தங்களது தாயகம் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மொத்தம் 11 பேர் பங்கேற்றிருந்த நிலையில் 8 பேர் மட்டுமே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். 

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் டேனி ரூபென் கூறுகையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த 11 இங்கிலாந்து வீரர்களில் 8 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறேன். மேலும் தாயகம் திரும்பும் வீரர்கள் 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள மூன்று வீரர்கள் ஓரிரு நாள்களில் இங்கிலாந்து அழைத்து செல்லப்படுவர் என்று தெரிவித்துள்ளார். 

அதன்படி, ஜானி பேர்ஸ்டோவ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்), சாம் கரன் (சென்னை சூப்பர் கிங்ஸ்), டாம் கரன் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) சாம் பில்லிங்ஸ் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), கிறிஸ் வோக்ஸ் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மொயீன் அலி (சென்னை சூப்பர் கிங்ஸ்) , ஜேசன் ராய் (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்) ஆகியோர் இன்று இங்கிலாந்து சென்றுள்ளனர். 

மேலும் ஈயான் மோர்கன் (கேகேஆர்), பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டேவிட் மாலன், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் இன்னும் ஓரிரு நாள்களில் தயாகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை