ஐபிஎல் 2021: யுஏஇ-ல் லேண்ட் ஆன சிஎஸ்கே!

Updated: Sat, Aug 14 2021 10:59 IST
Image Source: Google

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இத்தொடரின் 2ஆம் பாதியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.

சமீபத்தில் ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதில் மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இத்தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்த அணிகளை முதல் போட்டியில் மோதவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஐபிஎல் தொடருக்கு இன்னும் சுமார் ஒரு மாத காலமே இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளில் அணி நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தனி விமானம் மூலம் அபுதாபி சென்றடைந்தனர். இந்நிலையில் சிஎஸ்கே வீரர்களும் அமீரகம் சென்றுள்ளனர். 

 

அதன்படி கேப்டன் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, தீபக் சஹார், ருத்ராஜ் கெயிக்வாட், ராபின் உத்தப்பா, கரண் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் துபாய் சென்றடைந்துள்ளனர். துபாயில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பயோ பபுள் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீகரத்திற்கு சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை