ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சு!

Updated: Fri, Apr 30 2021 19:18 IST
IPL 2021: RCB won the toss and choose to field first (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

இன்றைய போட்டிகான பஞ்சாப் அணியில் மயாங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங், ஹென்ரிக்ஸ் ஆகியோருக்கு பதிலாக மெரிடித், பிரம்சிம்ரன், ஹர்பிரீட் சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அதேபோல் ஆர்சிபி அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சபாஷ் அஹ்மத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், பிரப்சிம்ரன் சிங், ஷாருக் கான், கிறிஸ் ஜோர்டான், ரிலே மெரிடித், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஹர்பிரீத் பிரர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, தேவ்தத் பாடிக்கல், ரஜத் படிதர், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், சபாஷ் அஹ்மத், டேனியல் சாம்ஸ், கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை