ஐபிஎல் 2021: ஷாருக் கானை பாரட்டிய கேஎல் ராகுல்!

Updated: Sat, Oct 02 2021 12:37 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரி 45ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 165 ரன்களை குவிக்க, பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய தமிழக அதிரடி வீரரான ஷாருக் கான் 9 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என அட்டகாசமாக 22 ரன்களை குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில் இது குறித்து போட்டி முடிந்து பேசியுள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் “ஷாருக் கான் ஒரு சிறப்பான பேட்ஸ்மேன் என்பது வலைப்பயிற்சியில் நாங்கள் பார்த்தோம். அது மட்டுமின்றி அவர் எவ்வளவு வலிமையான பிளேயர் என்பது இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் அனைவருமே பார்த்ததுதான்.

எப்போது பேட்டிங் பயிற்சி எடுத்தாலும் என்னிடம் வந்து ஏகப்பட்ட கேள்விகளை அவர் கேட்பார். மேலும் அவருக்கு போட்டியை வெற்றிகரமாக பினிஷிங் செய்ய வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அது குறித்தும் என்னிடம் அதிகம் விவாதிப்பார். இன்று அவர் விளையாடிய விதம் ப்ராப்பரான கிரிக்கெட் ஷாட்களாக அமைந்தன. நிச்சயம் அவரால் சில பவுண்டரிகளை குவிக்க முடியும் என்றும் எளிதாக அவரால் பந்தை சிக்சருக்கு விரட்ட முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அந்த வகையில் இன்று அவர் எங்களுக்காக சிறப்பான இன்னிங்சை விளையாடி உள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு அணிக்காக பல போட்டிகளை அவர் பினிஷ் செய்து கொடுத்துள்ளார். அந்த வகையில் ஷாருக் கானின் ஆட்டம் இன்று மிக முக்கியமாக அமைந்தது” என பாராட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை