ஐபில் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 66ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

Advertisement

நவி மும்பையிலுள்ள டி ஓய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

Advertisement

மேலும் இன்றைய போட்டிக்கான லக்னோ அணியில் எவின் லூயிஸ், மனன் வோரா, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரும், கொல்கத்தா அணியில் அபிஜித்தும் இடம்பெற்றனர்.

இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய லக்னோ அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் - குயிண்டன் டி காக் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதன்மூலம் இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் கடந்தது. தொடர்ந்து கேகேஆர் அணி வீரர்கள் விக்கெட் எடுக்க முயற்சிக்க, சற்றுப்பொருட்படுத்தாமல் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குயிண்டன் டி காக் 59 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். மேலும் ஐபிஎல் தொடரில் இது அவருக்கு இரண்டாவது சதமாகும்.

Advertisement

அதன்பின் டிம் சௌதி வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தை கேஎல் ராகுல் சிக்சருக்கு பறக்கவிட, அவரைத் தொடர்ந்து அதே ஓவரில் குவிண்டன் டி காக் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி மிரளவைத்தார். 

அதனைத்தொடர்ந்து 20ஆவது ஓவரை வீசிய ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஓவரையும் டி காக் விட்டுவைக்கவில்லை. அந்த ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.

இதன்மூலம் லக்னோ அணி 200 ரன்களையும் கடந்தது. மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் பார்ட்னர்ஷிப் முறையில் அதிக ரன்களைக் குவித்த ஜோடி எனும் சாதனையை குயிண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இணை படைத்தது. 

Advertisement

மேலும் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயிண்டன் டி காக் 140 ரன்களையும், கேஎல் ராகுல் 68 ரன்களையும் சேர்த்தனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News